இந்த கார்கள் மலைப் பாதைகளிலும் மிகவும் சரியாக இயங்குகிறது. இதையும் விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்து விட்டனர். ரோட்டோரத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அடையாள குறியீடுகளை இந்த காரில் உள்ள “சென்சார்” கருவிகள் கவனித்து ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது. இதை உருவாக்கி உள்ள பிரபல “ரோபட்டிக்” விஞ்ஞானி கிறிஸ்டோபர் உர்ம்கர் கூறும் போது, “இந்த ரோபாட்டிக் ரக கார்கள் அடுத்த தலைமுறையில் மிகவும் பிரபலமாகி விடும். அனைத்து நாடுகளிலும் ரோபாட் கார்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
இக் கார்களில் பயணம் செய்பவர்கள் எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று முன்கூட்டியே பதிவு செய்து விட்டால் அந்த இடத்திற்கு சென்றதும் நின்று விடும். இக் கார்களில் செல்லும் போது பக்கத்தில் எந்த வாகனத்துடனும் மோதி விடுமோ என்று பயப்பட தேவையில்லை. காரில் உள்ள சென்சார் கருவி மற்ற வாகனம் நெருங்கி வருவதை அறிந்து “டக்” கென விலகி விடும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்த வகை கார்களை சோதனை ஓட்டம் நடத்தி பார்த்துள்ளோம். முழு வெற்றி கிடைத்துள்ளது” என்றார். தானாக இயங்கும் இந்த ரோபாட்டிக் கார்களை நம் நாட்டில் இயக்கினால் பெருமளவு விபத்துக்கள்
No comments:
Post a Comment