பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை தனது கவனத்தை திருப்பியுள்ளது.
ஜி.எல் பீரிஸால் நடாத்தப்படும் இம் மாநாட்டை பிரித்தானியா வாழ் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்க்கவேண்டும். கடந்த வருடம் மே மாதம் போரை நிறுத்தச்சொல்லி எவ்வளவு தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்களோ, அது போன்ற பேரெழுச்சி ஒன்று அக்டோபர் 19ம் திகதி வெடிக்கவேண்டும்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க மாநாடு போடும் ஜி.எல் பீரிசுக்கு தமிழர்கள் ஒற்றுமை என்றால் என்ன எனக் காட்டவேண்டி நிலை தற்போது தோன்றியுள்ளது.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது, இனி என்ன இருக்கிறது என்று எமது இனம் துவண்டுபோயுள்ள நிலையில், எமது இனத்தினை சீர்குலைக்க இவர்கள் முதல்கட்ட காய் நகர்த்தலாக மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
புலிகளின் வலைப்பின்னல் வலுவாக உள்ளது, அவர்கள் சர்வதேச ரீதியாக இயங்குகிறார்கள் என பிரித்தானிய அரசின் காதுகளில் ஓத இவர்கள் புறப்பட்டுள்ளனர். இவர்களோடு தெற்காசியாவின் தீவிரவாதத்தை ஆராய்வதாகக் கூறிவரும் சிங்கள புத்திஜீவியான ரொஹான் குணரத்னவும் பிரித்தானியா வருகிறார். அவரின் கைகளில் எவர் மாட்டினாலும் அந்த நபரை மூளை சலவை செய்வதில் ரோகான் குணரத்ன கில்லாடி. இவர்கள் இணைந்து பிரித்தானியாவில் நடாத்தவிருக்கும் மாநாட்டிற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்!
No comments:
Post a Comment