இந்த மாத இறுதியில் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, அம்பாந்தோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இந்த இரண்டு இடங்களிலும் அமைக்கப்படவுள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் கொன்சியூலர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
தென்பகுதியில் உள்ள சிங்களவர்களுக்காக சேவைகளை மேற்கொள்வதற்காக அம்பாந்தோட்டையிலும் யாழ்ப்பாண மக்களுக்கு சேவையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலும் இந்த காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அம்பாந்தோட்டையில் இந்திய கொன்சியூலர் அலுவலகம் திறக்கப்படுவதற்கான காரணம், அங்குள்ள சிங்கள மக்களுக்கு சேவை செய்தவற்காகவல்ல.
சீனாவின் ஆதிக்கம், இலங்கையின் தென்பகுதியில் இருக்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவற்காகவே இந்தியா இந்த கொன்சியூலர் அலுவலகத்தை திறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment