Wednesday, October 6, 2010

உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது பிரதம மந்திரியாக கடந்த வார இறுதியில் தெரிவு செய்யப்பட்ட உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவருபவரும், அமெரிக்கச் சட்டத்துறை வல்லுநருமான திரு. விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் ஒரு அமெரிக்க பிரஜையாவார்.

இந் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்ரகுமாரன் வெளிநாடுகளிற்கு பயணம் செய்கின்ற போது அவரிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களையே அமெரிக்கா கருத்திலெடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராக தேசியத் தலைவர் பிரபாரகனால் நியமிக்கப்பட்டு அந்தத் பணியில் தொடர்ந்து இருந்து வரும் உருத்ரகுமாரன் அவர்கள் நோர்வேஜிய அனுசரணைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தேசியத் தலைவரால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment