இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, பிரிமா நிறுவனம் அண்மையில் கோதுமை மாவின் விலை 8 ரூபா 50 சதத்தால் அதிகரித்ததன் காரணமாகவே, இந்த முடிவை தமது சங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் கோதுமா மா கிலோ ஒன்றின் விலை 84 ரூபாவாகும்
இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 50 ரூபாவாக உயர்வடைய உள்ளது.
அதேநேரம் பாணின் விலையுயர்வு காரணமாக அதனை பிரதான உணவாக கொண்டுள்ள சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment