Friday, October 8, 2010

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதென சபாநாயகர் அறிவிக்கவில்லை

சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதென சபாநாயகர் அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடமாகினால் அது குறித்து சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பது வழமையான நியதியாகும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு வேறும் ஓருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எவ்வாறு அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாடாளுமன்ற நியதிகளுக்கு முரணானதென கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது உறுப்புரிமை உடனடியாக ரத்தாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் சுவரொட்டி ஒட்டுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடை என்பனவற்றுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகத் தெரிவித்து அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டிகளை எதிர்க்கட்சித் தலைவர் ஒட்டி, சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

No comments:

Post a Comment