Wednesday, October 6, 2010

இலங்கை ஊடாக சீனா ஆயுதக் கடத்தல்: அதிர்ச்சித் தகவல்


இலங்கையை தளமாகக் கொண்டு ஆசிய நாடுகளில் உள்ள சில முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆயுதங்களை வழங்கிவருவதாக 150 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை றோ அமைப்பு தயாரித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவுக்கு எதிராகச் செயல் படும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கைக்குண்டுகள் உட்பட, வெடிபொருட்களையும் வினியோகித்துள்ளது. 2007ம் ஆண்டு பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தவேளை அதனை புலிகளின் கப்பலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை இட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இக் கப்பல் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், இது பங்களாதேஷ் நோக்கிச் செல்வதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான சான்றிதழ்கள் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இக் கப்பலை இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தடுத்துவைத்தனர். கப்பலில் ARGES 84 என்று அழைக்கப்படும் கைக்குண்டுகளும், வெடிபொருட்களும் இருந்தாகக் கூறப்படுகிறது. பின்னர் பாகிஸ்தான் இராணுவம் கடும் அழுத்தத்தைப் பிரயோகித்து அக்கப்பலை விடுவித்ததாகவும், பின்னர் அக்கப்பலில் உள்ள தளபாடங்களை சீனக் கப்பல் ஒன்று ஏற்றிக்கொண்டு பங்களாதேஷ் சென்றதாகவும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment